search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணன் மகன் தாக்குதல்"

    கயத்தாறு அருகே சொத்து தகராறில் மத போதகரை அண்ணன் மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா கோயில்பிள்ளை (வயது 60). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    மேலும் இவர் கடலூரில் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராஜா கோயில்பிள்ளையின் அண்ணன் பால் தங்கசாமி. இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருடைய மகன் ராஜா (32), ஆட்டோ டிரைவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பால் தங்கசாமியும், அவருடைய மனைவியும் இறந்து விட்டனர். இதனால் ராஜாபுதுக்குடியில் உள்ள பூர்வீக வீட்டில் ராஜா தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.

    இந்த நிலையில் ராஜா கோயில்பிள்ளைக்கும், ராஜாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. பூர்வீக சொத்துக்களை ராஜா கோயில்பிள்ளை அபகரித்ததாக ராஜா புகார் கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    கடலூரில் இருக்கும் ராஜா கோயில்பிள்ளை அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று, தனது நிலங்களை பார்த்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் இரவில் சொந்த ஊரில் உள்ள தனது நிலங்களை பார்ப்பதற்காக இவர் தனியாக புறப்பட்டு வந்தார்.

    நேற்று மதியம் அவர், ராஜாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜா திடீரென அரிவாளால் ராஜா கோயில்பிள்ளையை சரமாரியாக வெட்டினார்.

    இதில் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுபற்றி கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ராஜா கோயில்பிள்ளையின் உடல் பிரேத‌ பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர். 

    கிருஷ்ணகிரியில் செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த அண்ணன் மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலை கணபதி தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி ராணி (வயது 58).

    கிருஷ்ணகிரியில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ராணிக்கு அண்ணன் மகன் ஆவார். இந்த நிலையில் சுரேஷ் தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மீண்டும் ராணியிடம் சென்று அவர் பணம் கேட்டு தகராறு செய்தார். 

    அப்போது அவர் பணம் தரமறுத்ததால் ஆத்திரத்தில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராணியின் கழுத்தில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே ராணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×